http://2captcha.com/?from=669382
Thursday, 26 June 2014
Saturday, 21 June 2014
நல்ல வெள்ளையான சருமத்தினை பெற இயற்கையான பொருள் இருக்கையில் !! கண்ட கண்ட கீரிம் வேண்டாம் !!
அனைவருக்குமே நல்ல வெள்ளையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக கடைகளில் விற்கப்படும் பல்வேறு அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இதனால் சருமத்தின் நிறம் அதிகரிக்கிறதோ இல்லையோ, சருமத்தில் மட்டும் எண்ணற்ற பிரச்சனைகள் தவறாமல் ஏற்படுகிறது. எனவே எப்போதும் அழகை அதிகரிக்க செயற்கை வழிகளை முயற்சிப்பதை விட, இயற்கை வழிகளை முயற்சித்தால், சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதுடன், சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
அப்படி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் இயற்கை பொருட்களில் ஒன்று தான் பாதாம். பாதாம் விலை அதிகமாக இருந்தாலும், இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதையே சருமத்தில் பயன்படுத்தினால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும். இங்கு அந்த பாதாமை எப்படியெல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
பாதாம் மற்றும் பால் பேக்
2 டேபிள் ஸ்பூன் பாதாம் பொடியை, பாலுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.
பாதாம், முட்டை மற்றும் எலுமிச்சை
1 டீஸ்பூன் பாதாம் பொடியில், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தின் நிறம் விரைவில் அதிகரிக்கும்.
பாதாம் எண்ணெய் மசாஜ்
பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.
பாதாம் மற்றும் தேன்
பாதாமை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, காலையில் எழுந்து அதன் தோலை நீக்கிவிட்டு அரைத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.
பாதாம்-ஓட்ஸ் ஃபேஸ் பேக்
1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பொடி சேர்த்து, அத்துடன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் சேய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் இந்த முறையை வறட்சியான சருமம் உள்ளவர்கள் பயன்படுத்துவது சிறந்தது.
Thursday, 12 June 2014
சித்த மருத்துவம்
* சாதம் வடித்த
கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன்
நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால்
இடுப்புவலி நீங்கும்.
கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன்
நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால்
இடுப்புவலி நீங்கும்.
* அரிசியுடன் வெந்தயத்தைச்
சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால்
தாய்ப்பால் சுரக்கும்.
சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால்
தாய்ப்பால் சுரக்கும்.
*
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய்
எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும்
ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம்
குணமாகிவிடும்.
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய்
எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும்
ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம்
குணமாகிவிடும்.
* கறிவேப்பிலையை அம்மியில்
வைத்து அதனுடன்
தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து,
மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர்
குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
வைத்து அதனுடன்
தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து,
மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர்
குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
* சாம்பிராணி, மஞ்சள்,
சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும்
சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும்
சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில்
பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல்
குறையும் கொப்பளமும் ஏற்படாது.
பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல்
குறையும் கொப்பளமும் ஏற்படாது.
* வெண்டைக்காயை உணவில்
அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள்
வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச்
செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக
சக்தியையும் உண்டாகும்.
அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள்
வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச்
செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக
சக்தியையும் உண்டாகும்.
* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில்
அதே அளவு விட்டு இதில்
வெண்தாமரை மலர்களைப் போட்டுக்
காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில்
வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள்
வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண்
நோய்கள் அகலும்.
அதே அளவு விட்டு இதில்
வெண்தாமரை மலர்களைப் போட்டுக்
காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில்
வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள்
வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண்
நோய்கள் அகலும்.
* புடலங்காயின் இலைச்சாறு, காலையில்
குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல்
குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய்
சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல்
பருமன் குறையலாம்.
* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும்
கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண்
குணமாகும்.
* கேரட் சாறும் சிறிது தேனும்
கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள்
வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த
நோய்கள் தீரும்.
* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ்,
வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க
வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர்
சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய்
கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல்
தளர்ச்சி விலகும்.
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக்
குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக்
கரகரப்பு போகும்.
சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி,
உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப்
செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும்
சேர்த்து அரைத்து இதனுடன் தேன்
கலந்து காலை மாலை உணவுக்கு முன்
சாப்பிட்டால் டான்சில் கரையும்.
குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல்
குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய்
சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல்
பருமன் குறையலாம்.
* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும்
கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண்
குணமாகும்.
* கேரட் சாறும் சிறிது தேனும்
கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள்
வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த
நோய்கள் தீரும்.
* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ்,
வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க
வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர்
சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய்
கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல்
தளர்ச்சி விலகும்.
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக்
குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக்
கரகரப்பு போகும்.
சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி,
உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப்
செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும்
சேர்த்து அரைத்து இதனுடன் தேன்
கலந்து காலை மாலை உணவுக்கு முன்
சாப்பிட்டால் டான்சில் கரையும்.
Saturday, 7 June 2014
முடவாட்டுக்கால் என்ற காய கல்ப மூலிகை..!
இந்த முடவாட்டுக்கால் மூலிகையை குறுக்கில் கால் இஞ்சு அளவிற்கு சிறு துண்டு வெட்டி தோலை சீவி நசுக்கி சிதைத்து தக்காளி சேர்க்காமல் , மிளகு ,சீரகம் மற்றும் ஆட்டுக்கால் சூப்பிற்கு சேர்க்கும் பொருட்களை சேர்த்து சூப்பாக வைத்துக் குடிக்க முழங்கால் வலி , கீழ் முதுகு வலி, கை மூட்டு வலி,கழுத்து வலிகள் இவைகள் தீரும். தினமும் இந்த சூப்பை பருகி வர உடலில் உள்ள எல்லா தொல்லைகளும் படிப்படியாகத் தீரும்.
இது ஒரு காளான் வகையைச் சேர்ந்தது .எனவே இதற்கு இலைகள் கிடையாது . இது கொல்லி மலையிலும் , கஞ்ச மலையிலும் , சதுரகிரி மலையில் சில இடங்களிலும் கிடைக்கிறது . இதை மேற்குறிப்பிட்ட காலாங்கி நாதர் கொல்லி மலை ரகசியம் மரணம் மாற்றும் மூலிகைகள் நூலில் குறிப்பிட்ட முறையில் பூரச்செந்தூரம் செய்து 48 நாட்கள் சாப்பிட தேகம் மரணத்தால் அழியாது காயம் சித்தியாகும்.
மூலிகை நீர்
சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.
ஆவாரம்பூ நீர்
“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
கரிசாலை நீர்
சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.
செம்பருத்தி நீர்
செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
நன்னாரி நீர்
“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.
துளசி நீர்
குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,
தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.
தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.
வல்லாரை நீர்
யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.
Friday, 6 June 2014
தூக்கமின்மை எளிய தீர்வு (அக்குபிரஷர்)
தூக்கமின்மை எளிய தீர்வு (அக்குபிரஷர்)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேவை இல்லாத சப்தங்கள், அதிர்வுகள், அசைவுகள் அற்ற இரவில், வெளிச்சக்கீற்றுகள் இல்லாத இருட்டில் உறங்கும் போது ஆழ்ந்த தூக்கம் வரும்.. அப்படியான ஆழ்ந்த தூக்கத்தில் உடல் உறுப்புகள் நன்கு ஓய்வெடுக்கும்... விழித்து எழுந்ததும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேவை இல்லாத சப்தங்கள், அதிர்வுகள், அசைவுகள் அற்ற இரவில், வெளிச்சக்கீற்றுகள் இல்லாத இருட்டில் உறங்கும் போது ஆழ்ந்த தூக்கம் வரும்.. அப்படியான ஆழ்ந்த தூக்கத்தில் உடல் உறுப்புகள் நன்கு ஓய்வெடுக்கும்... விழித்து எழுந்ததும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்...
ஆனால் நவீன கால வாழ்க்கை முறையில் ஆழ்ந்த தூக்கம் என்பது அரிதான விஷயமாகி விட்டது... இரவு முழுவதும் கண் விழித்து வேலை செய்பவர்கள் என்னதான் பகல் நேரத்தில் உறங்கினாலும் அவர்களால் ஆழ்ந்த தூக்கத்திற்கு போக முடியாது... இப்படி ஆழ்ந்த உறக்கம் இல்லாததால் உடல் எப்போதும் சோர்வுடன் அசதியாக காணப்படும்...
இரவில் உறங்குபவர்கள் கூட ஆழ்ந்த உறக்கம் இல்லை என்றால் காலையில் எழும் போதே சோர்வுடன் காணப்படுவர்.. கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், தொடர் தும்மல்கள் போன்றவற்றால் அவதிப்படுவர்... இதற்கு ஒரே நிவாரணி.. ஆழ்ந்த தூக்கம் மட்டுமே... இதற்காக சிலர் தூக்க மாத்திரை போன்ற ஆபத்தான வழிமுறைகளை நாடுவார்கள்.... இதனால் பிரச்சினை தற்காலிகமாக தீர்ந்ததாய் நினைக்கலாம்.. ஆனால் அது மிக பயங்கரமான பின்விளைவுகளை கொடுக்கும்...
பொதுவாகவே அனைவரும் இரவில் குறைந்தது 7 மணிக்கு முன்பாக உணவு எடுத்துக்கொண்டு, 9.30 to 10 க்கு படுக்கைக்கு சென்றுவிட வேண்டும்...
ஆழ்ந்த உறக்கம் வர அக்குபிரஷர் முறையில் மிக எளிமையான வழி இருக்கிறது...படத்தில் குறிப்பிட்டு இருக்கும் இடத்தில், கையின் கட்டை விரலால் 30 வினாடிகள் வலதுபுறமாகவும், 30 வினாடிகள் இடதுபுறமாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.. தூக்கம் இல்லாதவர்கள், ஆழ்ந்த உறக்கம் இல்லாதவர்கள் செய்து பாருங்கள்... பக்கவிளைவுகள் இல்லாமல் நல்ல பலன் கிடைக்கும்.
Monday, 2 June 2014
முடி உதிர்தலை தடுக்க எளிய வழி (அக்குபிரஷர்
இன்றைய அனைவரின் மிக முக்கிய பிரச்சினையாகவே ஆகிவிட்ட ஒன்று இந்த முடி கொட்டுதல்.
உடலில் பிராணசக்தி குறைந்து வியாதிகள் தலை தூக்க ஆரம்பிப்பதன் அறிகுறியே முடி உதிர்தல்.
உடலில் ஜிங்க், ஹீமோகுளோபின், காப்பர், இரும்பு, வைட்டமின் சி, பி, மற்றும் புரதச் சத்துகளின் குறைபாடுகள் முடி உதிர காரணமாக இருந்தாலும் மிக முக்கிய காரணம் தூக்கமின்மையே ஆகும்.
படத்தில் இருப்பதுபோல இரண்டு காதுகளிலும், கை கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலால் பத்து நிமிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வர வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வது நிற்பதோடு இல்லாமல் நன்கும் வளரும். எந்தவிதமான செலவும், பக்கவிளைவுகளும் இல்லாமல் எளிய வழியில் தீர்வு காணலாம்.
Subscribe to:
Posts (Atom)