Saturday, 22 March 2014

பிராண சரீரத்தை வலுப்படுத்தும் பயிற்சிகள்

நாடிசுத்தி :-

உபயோகப்படுத்த வேண்டியது வலது கையின் ஆட்காட்டி மற்றும் பெருவிரல்கள்.மூச்சை மென்மையாக,ஆழமாக இழுக்கவேண்டும் வலிந்து செய்யக்கூடாது.விடும் போதும் அப்படியே செய்க.

1.வலதுகையின் பெருவிரல் கொண்டு வலது மூக்கு துவாரத்தை அடைத்து இடது மூக்கு துவாரம் வழியாக உள்ளிருக்கும் பிராணனை வெளியிடவேண்டும்.பின் அதே (இடது) மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

2.பின் ஆட்காட்டிவிரல் கொண்டு இடது மூக்கு துவாரத்தை அடைத்து வலது மூக்கு வழியே மூச்சை வெளியிட வேண்டும்.பின் அதே (வலது) மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

இப்படி செய்தால் ஒரு தடவை(சுற்று).இவ்வாறு குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 15 வரை செய்யலாம்.இதை காலை,மதியம் உணவுக்கு முன்,மாலை ,நள்ளிரவு என 4 வேளையும் செய்து வர பிராண சரீரம் மிக வலிமையுடன் திகழும்.
நாடி சுத்தியை குறைந்தது ஒரு மாதமாவது செய்து பின் மற்ற பிராணயாம பயிற்சிகளை செய்தல் நலம்.

பிராணயாமம்:-

இரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும் மெதுவாக,ஆழமாக மூச்சை உள்ளிழுத்து பின்னர் இரண்டு மூக்கு துவாரத்தின் வழியாகவும் மெதுவாக மூச்சை வெளியிடவும். இதைக் குறைந்தது 10 முறைகள் செய்யலாம்.

இதுவும் இரத்த சுத்தி செய்வதுடன்,சுவாசப்பைகளை பெரிதாக்கி சுவாசம் நன்றாக நடைபெற உதவுகிறது.மூளைக்கு நிறைவான ஆக்சிஜன் செல்வதால் ஞாபக சக்தி கூடும்.ஏதேனும் பாடங்கள் படிக்கும் முன் இதை சில தடவைகள் செய்து பின் படிக்க நன்கு மனதில் பதியும்.நேர்முகத்தேர்வுக்குக் காத்திருக்கும் போது சில தடவைகள் செய்ய பதற்றம் தணியும்.ஏதாவது ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்கும் முன் சில தடவைகள் செய்ய மனம் நிதானத்தில் இருக்கும் நல்ல முடிவாக எடுக்க உதவும்.

கபாலபாதி:-

இரு மூக்கு துவாரத்தின் வழியாகவும் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக மூச்சை இழுத்தும்,வெளியிடவும் செய்யவேண்டும்.இதன் மூலம் கபாலம் எனும் தலையில் தங்கிய சளி வெளியேறும்.
ஒவ்வொரு வியாதி வரும் போதும் அது நமக்கு முன்கூட்டியே
எச்சரிக்கை செய்துவிட்டுதான் வருகிறது.உதாரணமாக சளி பிடிக்கும் முன் தும்மல் வரும்,தொண்டையில் ஒரு மாதிரியான அரிப்பு வரும் அதை உணர்ந்து இந்த கபாலபதி பயிற்சியை 20 தடவை முதல் 30 தடவை வரை செய்ய சளி பிடிக்காது.இதை தொடர்ந்து செய்து வர சைனஸ் நீங்கும்.

சீத்காரி :-

சீதளம் என்றால் குளிர்ச்சி எனப்பொருள்.

பற்களைச் சேர்த்து நாக்கை மேலே சிறிது மடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.பின் வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.

சீத்தளி:-

நாக்கை குழல் போல் மடித்து மூச்சை உள்ளிழுக்கவும்.பின் வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.

வெயிலில் எங்காவது அலைந்து நன்கு வேர்த்து விட்டால் வீடு அல்லது அலுவலகம் வந்து சேர்ந்ததும் இதைச் செய்ய உடனே வியர்வை நிற்கும்.
உஷ்ணமான உடல் அமைப்பு கொண்டவர்கள் இந்த ப்ராணாயாமங்களை தினமும் செய்து வர உடலில் அதிக உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.உஷ்ண தேகமானால் அதிக காமம் உண்டாகும்,சிறுநீரோடு விந்து,நாதம் வெளியேறும்,பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உண்டாகும் அவை யாவும் இந்த ப்ரானாயாமத்தினால் தீரும்.ரொம்ப சோர்வாக உணரும் வேளைகளில் இதனை செய்ய உடனே சக்தி கிடைக்கும்.இரவில் விளித்து படிக்கும் மாணவர்கள் இதை சில தடவைகள் செய்ய உறக்கம் உடனே வராமல் சக்தியும் கிடைக்கும்.
சீத்தளி,சீத்காரி இரண்டு ப்ராணாயாமங்களையும் மழை மற்றும் பனிக்காலங்களில் செய்ய வேண்டாம்.

No comments:

Post a Comment