Saturday, 22 March 2014

பல்வேறு விதமான தியான

ஓம் சக்தி சிவமயம்
ஓம் அகத்தீஸ்வராய நமஹ!
ஒன்றே செய்! நன்றே செய்! இன்றே செய்!
ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம் பலவன்
ஞானகுரு வாணியை முன்னாடு!

1.மனம் மூக்கு நுனியிலே நிலை பெற்று நிற்க சில நாட்களில் அற்புதமான மணங்களை நுகரக் கூடிய ஆற்றல் உண்டாகிறது.

2.காதின் அடியில் நிலை பெற்ற மனத்தால் அற்புதமான ஒலிகளைக் கேட்கிறேன்.

3.நாவின் நுனியிலே நின்றால் அற்புத சுவைகளை அறிய வல்லவனாகின்
றான்

4.நாவின் நடுவிலே மனம் ஒருமித்து நிற்க ஒன்றினை ஸ்பரிசிக்கின்ற அனுப
வம் உண்டாகின்றது.

5.அண்ணத்திலே (உள்நாக்கு) மனத்தை நிறுத்தினால் அற்புதமான உருவங்
களைக் காண்கிற அனுபவம் உண்டாகிறது.

6.எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் விடுபட சுடர்விடும் ஒளியினை தியானிக்கலாம்.

7.இதயத் தாமரையை நினை.இதனுடைய இதழ்களை கீழ்நோக்கி உள்ளது. இவற்றின் ஊடகச் சுழிமுனை நாடி செல்கிறது. மூச்சின் உள்ளே இழுத்து பின் வெளியே விடும்போது (ரேசகம், ப+ரகம்) இதயத் தாமரையின் இதழ்கள் மேல் நோக்கி விரிவதாகப் பாவனை செய். அப்போது இதயத்தினுள் சுடர் விடும் ஒளி எழும்பும்.இதைத் தியானித்திருக்கவும்,சகல புவனங்களைப் பற்றியும் அறியலாம்.(இதுவே சிதம்பர ரகசியமாகும்).

8.நீங்கள் யாரேனும் ஒரு பெரியவரைப் பற்றியோ அல்லது இயற்கைக் காட்சிகளைப் பற்றியோ அல்லது கனவிலே காணுவதைப் பற்றியோ உண்மையிலே நடப்பதாக நினைத்துக் கொண்டு இருந்தால் தியானிக்கின்ற யோகியின் சித்தம் மிகச் சிறிய பரமாணு முதல் மிகப் பெரிய பரமம் ஈறாக எல்லாவற்றையும் தடங்கலின்றிக் காணுவீர்கள்.

9.யானை முதலிய விலங்குகளின் வலிமைகளைத் தியானிக்க அவற்றின் பலம் அடைகிறான்.

10.மந்திர ஜபத் தியானத்தால் இஸ்ட தேவதா சித்தி ஏற்படும்.

11.இதயக் கமலத்திலே உள்ள உள்ளொலியிலே நினைப்பானாகி வெகு தூரத்தில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகளையும்,மலை முதலிய தடைகளினால் மறைக்கப் படுகின்றவற்றையும்,மிக நுண்ணிய பொருள்களையும் அறிகிறான்.

12.கதிரவனாகிய சூரியனின் மீது சம்சயம் செய்வதால் புவனத்தைப் பற்றிய அறிவாற்றல் ஏற்படுகிறது.

13.மதியாகிய சந்திரனைத் தியானிக்க விண் மீன்களின் கூட்டங்களைப் பற்றிய அறிவாற்றல் ஏற்படுகிறது.

14.துருவ நட்சத்திரத்தை நினைத்து தியானிக்க எல்லா நட்சத்திரங்களின் இயக்கத்தைப் பற்றிய அறிவு உண்டாகிறது.

15.நாபிச் சக்கரத்தை தியானிப்பதால் உடலின் அமைப்பைப் பற்றிய அறிவு உண்டாகும்.

16.தொண்டைக் குழியிலே மனதை நிறுத்தி தியானம் செய்து வர பசி, தாகம் முதலியவை அடங்கும்.

17.கூர்ம நாடியிலே (கண்ணிலே நின்று இமைக்கும் ஒரு வாயு) மனதை நிறுத்தித் தியானம் செய்ய உடல் நிலைப் பேறு உண்டாம்.(அதாவது உடல் கலக்கமடையாது).

18.உச்சியிலிருந்து எழுகின்ற ஒளியினைத் தியானம் செய்து நிற்க சித்தர்களது தரிசனம் உண்டாகும்.

19.இதயத்தில் எல்லா சித்தங்களைப் பற்றிய அறிவும் உண்டாகிறது.

20.96தத்துவார்த்த வி~யங்களையும் விட்டொழித்த யோகியின் (தியானிக்கின்றவன்) அறிவானது நரம்பு நாடிகளைப் பற்றி தெளிவாக அறிவதாம்.
இதனால் இத்தன்மையோன் மற்றொரு சரீரத்திலே புகுதல் கூடும்.(கூடு விட்டு கூடு பாய்தல்).

21.உதான வாயுவை(உதராக்கினியை எழுப்பி உண்ட அன்ன சாரத்தை 72000 நாடி நரம்புகளிலேயும் கலப்பித்து இச்சடத்தை வளர்த்துத் தானும் வளருவதுமாகிய ஒரு வாயு) வென்றால் நீர், சேறு, முள் இவற்றின் மேல் நடக்கலாம்.காரணம் இந்த உதானன் சுவாசப் பைகளையும்,உடலின் மேற்பாகத்தையும் அடக்கி ஆளுகின்ற நரம்பு மண்டலம் சேர்த்து ஆகும். இதனை வெற்றி கொண்டால் உடல் இலகுத்துவம் அடைகிறது.இதனால் தான் இத்தியானி வாழ் நுனியிலும்,மேற்கூறிய தொழிலின் வழியும் செய்ய இயலுகிறது.அவன் விரும்பிய போது இந்த வாழ்வை விட்டுச் செல்லலாம்.
(இதுவே ஜீவ சமாதியாம்.)

22.சமானன் என்னும் வாயுவைத் தியானித்து வெல்லுவதால் உடலைச் சுற்றி (அவன் விரும்பும் போது)ஓர் ஓளி உண்டாகிறது. (இவ்வுடலை ஏறுதல் குறைதல் இல்லாமல் சமனாய்க் கீழ்கொண்டு இயக்கும் தசவாயுக்களில் ஒன்றாகும்.)

23.கேள்வி இந்திரியம் (சுரோத்திரம் ஆகாயம் என்றும் சேர்க்கையின் மீது (செவியின் மீது) மீது மனம் ஒன்றித்து தியானித்து நிற்கத் தெய்வீக கேள்வி உண்டாகும். வெகு தூரத்திற்கு அப்பால் மொழியப் பட்டதையும் இச் சாதகன் கேட்கக் கூடும்.

24.இந்த உடல் ஆகாயத்தாலானது.ஆகாயமே ஒரு வகையாக உருவெடுத்து உடலாயிற்று.உடல் பொருளாகிய இந்த ஆகாயத்திலேயே சம்சயம் (தியானம்)செய்வானாகில் அது ஆகாயத்தைப் போன்று லகுத்துவம் அடையும். அவன் காற்றின் ஊடாக எங்கும் செல்லுதல் கூடும்.

25.பஞ்சப+தங்களை வெல்வானுகில் காயசம்பத்தும்,(சரீரத்தைக் கற் போன்று ஆக்குவது)அணிமாதி சித்தியும் (அணிமா,மகிமா,லகிமா,கரிமா, பிராத்தி,பிரா
காமியாம்,வசித்துவம்,ஈசத்துவம்)ஆகியன கை கூடும்.

26.இன்னமும்,பிறவியாலும்,மருந்துகளினாலும்,மந்திரஜபத்தினாலும்,தவத்தினாலும் சமாதியினாலும் சித்திகள் உண்டாகின்றது.

27.மேலும் எவ்விடத்தில் தீயானது கடையப்படுகிறதோ, எவ்விடத்தில் காற்றானது கட்டப்படுகிறதோ,எவ்விடத்தில் சோமரசம் ஓடுகிறதோ,அவ்விடத்தில் ஒரு ப+ரணமான மனம் படைக்கப்படுகிறது.

பாரமற்ற இலகுவான உடலும்,உடலின் நலமும்,தோலின் மென்மையும்,மேனி நிறத்தின் தெளிவும், அழகிய குரலும், உடலின் நறுமணமும்,மல மூத்திராதிகள் குறைந்து இருத்தலுமாகிய இவைகள் யோகப்பியாசத்திற்கு
(தியானத்திற்கு)முதல் பலனாக அமைகிறது.

No comments:

Post a Comment